
பெங்களூரு நகரின் மஹாலட்சுமி லே அவுட் பகுதியில் சமீபத்தில் நடந்த தங்க செயின் பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 40 வயது பெண் ஒருவர் விநாயகர் கோவிலுக்கு சென்று, மாலை நேரத்தில் பக்தர்கள் பாடல் பாடியபோது, ஜன்னலோரம் நின்று செல்போனில் எதையோ பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திருடன் அவரது கழுத்தில் இருந்த 30 கிராம் தங்க சங்கிலியை அறுத்துச் சென்றான்.
அதிர்ச்சி அடைந்த பெண் திருடன் செயினை பறித்துச் சென்றதாக அலறியவுடன், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருடன் விரைவாக ஓடிச் சென்றதால், அவர் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, திருடனை கண்டறியும் முயற்சியில் உள்ளனர்.
Share this video with your family members and please ask them to be careful about these chain snatchers. pic.twitter.com/21UynXo2zO
— yaarivanu_unknownu (@memesmaadonu) October 14, 2024