இந்தியாவில் கடைசியாக கடந்த 2011 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன் பின் கடந்த 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கு எடுக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் கொரோனா போன்ற காரணங்களால் அச்சமயம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் அரசியல் விகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்ந்து நடத்துவது குறித்து முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த முடிவின்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்தப்படும்.

இந்த பணி 2 கட்டங்களாக நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மார்ச் 1, 2027 முதல் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும். ஆனால் ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் உத்தரகாண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அக்டோபர் 2026 முதல் முன்னதாகவே தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.