
பிரபல தொழிலதிபரான ரத்தம் டாடா புதன்கிழமை மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. சிகிச்சை பலனின்றி நேற்று ரத்தன் டாடா உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி திரௌபதி முருங்கோ ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட் வளர்ச்சியின் மூலம் தேசத்தை கட்டி எழுப்பிய நெறிமுறைகளுடன் சிறந்து விளங்கிய ஒரு ஆளுமையை இந்தியா இழந்துவிட்டது. பத்ம விபூஷன், பத்மபூஷன் விருதுகளை வென்ற ரத்தன் டாடா, டாடாவின் பெருமையை உலகளாவிய அளவில் கொண்டு சென்றார். அனுபவம் மிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தியவர். தொண்டு மற்றும் சேவை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு விலை மதிப்பு அற்றது. டாட்டா குழுமத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.