
நாட்டில் மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு நாடாளுமன்றத்தில் இன்று முதல்முறையாக முழுமையான இன்று முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2024-25 ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தாக்கல் செய்வது காலதாமதம் ஆனால் அது இனி கிரிமினல் குற்றமாகாது என அறிவித்துள்ளார். அதன் பிறகு தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான நிலையான வரி கழிப்பு ரூ.50000-ல் இருந்து ரூ.75000 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புதிய வருமான வரி முறையில் ரூ.3 லட்சத்திலிருந்து வரிமுறை இல்லை எனவும், ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சத்திற்கு 5 சதவீத வரியும், ரூ.7 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை 10 சதவீதம் வரியும், 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை 12 சதவீத வரியும், 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20% வரியும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் இருந்தால் 30சதவீதம் வரி செலுத்த வேண்டும்.