தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில்  பதிவானதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். மதுரை விமான நிலையம் மற்றும் சேலத்தில் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், வேலூர், மதுரை மற்றும் சென்னை மீனம்பாக்கத்தில் தலா 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், தர்மபுரி, கரூர் பரமத்தி மற்றும் திருச்சியில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் வெயிலும், கோவை, திருத்தணியில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவாகியுள்ளது.