சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்துக்கு போட்டி நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆளுங்கட்சி எனக் கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது அடுத்த எதிர்கட்சி நாங்கள் தான் என்று கூறுகிறார். திமுக தான் எப்போதும் ஆளுங்கட்சி. தமிழ்நாட்டில் இப்போது 2-வது இடத்திற்கு வருவது யார் என்பதில் போட்டி நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.