
முன்னதாக தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் கொடி மரங்களை அகற்ற தனி நீதிபதி இளந்திரியன் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் அலுவலகங்களில் கொடி மரங்கள், கட்சி கொடிகளை வைத்துக் கொள்ளுங்கள் சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்த அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் புதிதாக கொடி கம்பம் வைக்க ஒவ்வொரு கம்பத்துக்கும் தல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
மேலும் வருகிற ஜூலை இரண்டாம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜாராக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.