தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதே சமயம் தினந்தோறும் காரசாரமான விவாதங்களும் நடைபெறுகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச மடிக்கணினி திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ. 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மடிக்கணினி ரூ.20000 என்ற அளவில் மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.