
குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம், அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இந்த விமானத்தில் பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. விபத்தின் போது விமானம் ஒரு மரத்தில் மோதியதாக ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்து சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவ, அதிலுள்ள காட்சிகள் மிகவும் பயங்கரமானவை என தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மொத்தம் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி விமான போக்குவரத்துத்துறை அமைச்சருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.