
கடந்த 2017 முதல் 2022 வரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலுத்தாத ஜிஎஸ்டி வரியை செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஜிஎஸ்டி ஆணையரகம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறியதாவது, கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வருமானத்தை அரசு கேபிள் டிவி கழகத்தின் வருமானமாக கருத முடியாது என்று கூறினார்.
மேலும் நோட்டீசுக்கு உரிய பதிலளித்தும் அதை பரிசீலிக்காமல், ஜிஎஸ்டி வரி ரூ.285 கோடியுடன், அபராதம் ரூபாய் 570 கோடி கேட்பதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து ஜிஎஸ்டி வரி தொடர்பாக அரசு கேபிள் டிவி கழகத்திற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.