மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்திராணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 60 ஆண்டுகள் பழமையான பாலம் இன்று இடிந்து விழுந்தது. விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது ஏறி நின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது.

இதனால் வெள்ளத்தில் 15 பேர் வரை அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களின் மருத்துவ செலவு மாநில அரசு ஏற்கும் என கூறியுள்ளார்.