திமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மொழிப்போர் தியாகியுமான இல். குட்டியப்பன் உடல்நல குறைவினால் தற்போது காலமானார். இவர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது மறைவுக்கு தற்போது திமுக கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் திமுக கட்சிக்காக 40 வருடங்களாக உழைத்து பல போராட்டங்களில் பங்கேற்ற உன்னத மனிதர் இல. குட்டியப்பன். அவரது மறைவு செய்தியை கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் திமுக நிர்வாகிகள் பலரும் தற்போது அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.