23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தி.மலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில்  கணிக்கப்பட்டுள்ளது.