கேரளாவில் பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசனை கொலை செய்த வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை அளித்துள்ளது கேரள நீதிமன்றம். 2021ஆம் ஆண்டு ரஞ்சித் சீனிவாசனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சேர்ந்த 15 பேர் வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்த வழக்கின் விசாரணை 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அவர்கள் அனைவரையும் தூக்கிலிட உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.