குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம், அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இந்த விமானத்தில் பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. விபத்தின் போது விமானம் ஒரு மரத்தில் மோதியதாக ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக மொத்தம் 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.  இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை தற்போது 133 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது அகமதாபாத்தில் நடந்த துயர சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயம் நொறுங்கியது என்று தெரிவித்துள்ளார்