சமீப காலமாக விமானங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி மக்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தரில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.