வி.வி.பாட் முறையில் செய்த மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் திமுக முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, வாக்கு இயந்திரம் – கன்ட்ரோல் யூனிட் இடையே ஒப்புகைச் சீட்டு இயந்திரம் உள்ளதால் தவறு நடக்க வாய்ப்புள்ளது. இதனால், ஒவ்வொரு தொகுதிக்கும் 50 ஆயிரம் வாக்குகள் வரை மாறக் கூடும் எனக்கூறிய அவர், 1% -2% தவறு நடக்கக்கூடும் என தேர்தல் ஆணையமே கூறியுள்ளது என்றார்.