கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடிகர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரான விஜய் அவர்களிடம் இருந்து விவாகரத்து கோரி, அவரது மனைவி சங்கீதா அவர்கள் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

​பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற இருந்த நிலையில், இன்று சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், முதலமைச்சர் விஜய் தரப்பில் வழக்கின் விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

​ஆனால், இதற்குச் சங்கீதா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “வழக்கை ஒத்திவைக்கக் கூடாது; சட்டசபை காரணமாக நேரில் வர இயலாவிட்டாலும், இன்றே வீடியோ கான்ஃபரன்ஸ் (Video Conference) மூலமாக இந்த வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்” என்று சங்கீதா தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் அதிரடியாக வாதிட்டனர்.

​இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த செங்கல்பட்டு நீதிமன்றம், வழக்கு விசாரணையைத் தற்போது பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் பிற்பகலில் இந்த வழக்கில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.