நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19, வாக்கு எண்ணிக்கை மே 22 தேதி நடைபெறும் என்று செய்தி வெளியானது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. 2024 தேர்தல் அட்டவணை குறித்து வாட்ஸ்அப்பில் ஒரு போலி செய்தி பகிரப்படுகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம். தேர்தல் அட்டவணையை செய்தியாளர் சந்திப்பு மூலம் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளது.