
நாடு முழுவதும் சமீபத்தில் இளநிலை நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் வருகிற ஜூன் 15ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தேசிய தேர்வுகள் வாரியம் தற்போது ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.