தமிழகத்தில் விண்வெளி துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். பொறியியல் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலின், அறிவியல் ஆர்வத்தையும் ஆளுமை திறனையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.