வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டி தீர்த்தது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. அங்கு வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சாலைகளில் தேங்கி இருந்த தண்ணீர் ராட்சத எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் வங்கக்கடலில் வருகிற 23-ஆம் தேதி புயல் உருவாக உள்ளது. தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.