
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறி வைத்து அழித்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதல்களை இந்தியாவின் பாதுகாப்பு படைகள் முறியடித்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதன் பிறகும் பாகிஸ்தான் அத்துமீறியதால் இனி தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரித்தார்.
பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறியதால் எல்லையில் போர் பதற்றம் நிலவியது. இதனால் எல்லை பகுதிகளில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்கள் தற்போது வீடு திரும்பலாம் என முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். பூஞ்ச் நகரம் என்பது சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காலியாக உள்ளது. வெளியேறிய மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வரலாம் என அறிவித்துள்ளார்.