
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வந்தவர் மோகன் நடராஜன். இவர் தயாரிப்பாளரும் ஆவார். இவருக்கு 71 வயது ஆகும் நிலையில் தற்போது உடல்நலக்குறைவின் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.
இவர் கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல் மற்றும் தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார். அதன் பிறகு கிழக்குக்கரை, மகாநதி, சிட்டிசன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியுள்ளார். மேலும் அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.