புதுச்சேரியில் பாமக பொதுக்குழு கூட்டம் மேடை நடைபெற்றது. அப்போது பாமக மாநில இளைஞரணி சங்கத் தலைவராக முகுந்தன் என்பவரை நியமித்தது தொடர்பாக அந்த கட்சியின் சிறப்பு பொதுக்குழு மேடையில் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆனவருக்கு பதவி எதற்கு? எனக்கு யாரும் தேவையில்லை என அன்புமணி ராமதாஸ் கூற, முகுந்தன் தான் பாமக இளைஞரணி தலைவர் என நிறுவன ராமதாஸ் அழுத்தம் திருத்தமாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.