பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு கட்சியில் எந்த முரண்பாடுகளும் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது.

சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் எனக்கும் அன்புமணிக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாட்டால் கட்சிக்கு எந்த பின்னடைவும் இருக்காது என கூறினார். கட்சியின் நிர்வாகிகளை பாமக நிறுவனர் ராமதாஸ் நீக்குவதும், அன்புமணி ராமதாஸ் அவர்கள் பதவியில் தொடர்வார்கள் என கூறுவதும் கட்சி நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பிலிருந்து வழக்கறிஞர் பாலு நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வழக்கறிஞர் கோபு நியமிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.