தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை உதயசூரியபுரத்தில் பாஜக பெண் நிர்வாகி சரண்யா என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் மதுரை மத்திய தொகுதி பாஜக மகளிர் அணி பொறுப்பில் இருந்தார்.  அதாவது திருமணம் ஆகி இவர் பட்டுகோட்டையில் வசித்து வரும் நிலையில் ஜெராக்ஸ் கடையிலிருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போதும் மர்ம நபர்கள் சிலர் சரண்யாவை தலையை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

மேலும் கொலைக்கான காரணம் சரிவர தெரியாத நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.