ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தனை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியில் வைத்து வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கண்ணனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக ஆனந்தன் கண்ணனை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.