போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த விவகாரத்தை வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று முறையிட்டிருக்கிறார்.பொங்கல் நேரத்தில் மக்கள் இதனால் சிரமப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இதனை நீதிமன்றம் வழக்காக எடுத்து விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.