நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தேசிய தேர்வு முகமையிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை முன் வைத்தார். அப்போது ஒரு இடத்தில் மட்டும் வினாத்தாள் கசிந்ததை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டது. இந்நிலையில் நீதிபதி நீட் தேர்வு முறை கேட்டில் ஈடுபட்ட மாணவர்களை கண்டறியாவிட்டால் மறுத்தேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம் என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு whatsapp மற்றும் telegram போன்ற செயலிகளில் நீட் வினாத்தாள் கசிந்ததால் அது காட்டுத்தீ போல் பல்வேறு இடங்களுக்கு பரவியுள்ளது. ஒரு இடத்தில் மட்டும் இன்றி பல இடங்களில் நீட் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே நீட் தேர்வு முறை கேட்டில் ஈடுபட்ட மாணவர்களை கண்டறிவது மிகவும் அவசியம். மேலும் அவர்களை கண்டறியாவிட்டால் நிச்சயம் மறுத்தேர்வு நடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார்.