வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக மாறியுள்ளது. இது நாளை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்று மற்றும் நாளை ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை கடலூர் மாவட்டத்தில் அதிகமான கனமழைக்கு வாய்ப்புள்ளதால் நாளை அந்த மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கிய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்