தீபாவளிக்கு மது விற்பனை என்று இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை; மது விற்பனை குறைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மதுக்கடை நேரம் குறைப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போதைக்கு அப்படியொரு திட்டம் இல்லை எனக் கூறிய அவர், மதுக்கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.