
கேரள மாநிலம் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசிதரூர் வேட்பாளராக களம் இறங்கினார். இந்த தொகுதியில் பாஜக கட்சியில் சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிட்டார்.
திருவனந்தபுரம் தொகுதியில் நிலவிய கடும் போட்டிக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இதன்மூலம் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 4-வது முறையாக சசிதரூர் வெற்றி பெற்று வாகை சூடினார். இது இந்தியா கூட்டணியினர் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.