
பெரும்பாலான நபர்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தினமும் ஆட்டிறைச்சி விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் ஒரு புதிய இணையதளம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன் பேட்டி அளித்துள்ளார்.