சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று இரவு 2 பேரால் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனை காதலித்து வந்த நிலையில் அவர்கள் இரவு வழக்கம் போல் சந்தித்துள்ளனர். அப்போது அங்கு வந்த இருவர் அவர்களை பின்னால் இருந்து தாக்கியுள்ளனர். அதன் பிறகு அந்த காதலனை அவர்கள் தாக்கி விட்டு காதலியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த பெண் தனக்கு மாதவிடாய் இருப்பதாக கூறிய போதிலும் அவர்கள் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த வழக்கில் சிசிடிவி கேமராக்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தினர்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் கோவி. செழியன் உறுதி கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் ஞானசேகரன் என்ற 37 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து நடத்தி வரும் நிலையில் இவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டதாக தற்போது காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அவர் ஆக்கபூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று போலீசார் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.