
தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. அரையாண்டு தேர்வு விடுமுறைகள் இன்றுடன் முடியும் நிலையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையில் நாளையும் விடுமுறை நீடிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை எழுந்த நிலையில் நாளை விடுமுறை என்று செய்தி பரவியது.
இந்நிலையில் இது தொடர்பாக தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் விடுமுறை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை முதல் மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் பள்ளிகளுக்கு சொல்ல வேண்டும்.