சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 28 பேர்‌ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய கட்சியின் பிரமுகர்கள் கூட சிலர் சிக்கினார். இந்த வழக்கில் 25 பேர் மீது இதுவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான சிசீங் ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் தற்போது ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 29 வது நபராவார். அண்மையில் சிசீங் ராஜாவை ‌ போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட 33 வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் நேற்று சென்னைக்கு அழைத்து வந்தபோது போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். மேலும் இதன் காரணமாக ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனார். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடத்தை தொடர்ந்து என்கவுண்டர் செய்யப்பட்ட  இரண்டாவது குற்றவாளி இவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் போலீசாரிடமிருந்து தப்பி ஓட முயன்ற சீசிங் ராஜா நீலாங்கரையில் தான் மறைத்து வைத்திருந்தால் ஆயுதத்தை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டதில் வாகனத்தில் குண்டு பாய்ந்தது. இதன் காரணமாக தற்காப்புக்காக வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல் அவரை நோக்கி சுட்டார். மேலும் இதில் சேசிங் ராஜா பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.