
தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் 4000 ரூபாயில் இருந்து 6000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 9 அறிவிப்புகளை வெளியிட்ட போது இதனை அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த அறிவிப்புகள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதனால் ஓய்வூதியதாரர்களுக்கு இனி பொங்கல் பரிசு தொகை ஆயிரம் ரூபாயாக வழங்கப்படுவதோடு முன்பணமும் 6000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.