தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையின் முதலாம்  வாசலில் இன்று மர்மப் பொருள் வெடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து இந்த மர்மப் பொருள் திடீரென வெடித்ததால், அருகிலிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் குண்டு வெடிப்பில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

“>