நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் நாம்  போட்டியிடவதில்லை என்றும்,  எந்த கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுகுழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதை தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக என்னை பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல. அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலில் உயரம் மட்டுமல்ல,  அதன் நீள  அகலத்தையும் அறிந்து கொள்ள கொள்ள, எம்முன்னோர் பலரிடமும் பாடங்களை படித்து,  நீண்ட காலமாக என்னை அதற்கு தயார்படுத்தி,  மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.

எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல. அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். என் சார்பில் நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம்…  நான் சார்ந்த கடமையை கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு,  முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியல் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக இருக்கும்  என அறிக்கை வெளியிட்டுள்ளார்.