சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய கமிஷனர் ஆக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது சென்னை மாநகர புதிய கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சந்தீப் ராய் ரத்தோர் தன்னுடைய பொறுப்புகளை புதிய காவல் ஆணையரிடம் ஒப்படைத்த நிலையில் அவர் தற்போது சென்னையின்  110-வது கமிஷனர் ஆக பொறுப்பேற்றுள்ளார்.