32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு எஸ்.பியாக திருநாவுக்கரசு, சென்னை புலனாய்வுத்துறை எஸ்.பியாக ஆர்.ராமகிருஷ்ணன், தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராக பண்டி கங்காதர், தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் எஸ்.பியாக மேகலினா ஐடன் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்