தமிழகம் முழுவதும் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டமானது விரிவாக்கம் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். ஏற்கெனவே இந்த திட்டத்தால் 18.50 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வரும் நிலையில், தற்போது மேலும் 2,23,536 குழந்தைகள் பயன்பெறுவர் என்று அரசு தெரிவித்துள்ளது.