திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற வாலிபர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய ஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர் தனுஷின் 17 வயது தம்பியை ஆள் வைத்து கடத்திய நிலையில் இந்த விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமன் கார் கொடுத்து உதவியதாக கூறப்பட்ட நிலையில் அவரைப் போலீசார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

இந்த கடத்தல் விவகாரத்தில் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்திக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் தலைமறை வாகிவிட்டார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த மனு விசாரணையின் போது ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் படி அவரை கைது செய்த போலீசார் அவரை பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தனர். அதன் பிறகு பூவை ஜெகன் மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் பின்னர் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இவரை சிபிசிஐடி போலீசார் நான்கு தனி படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் தற்போது அவருக்கு டெல்லி உச்சநீதிமன்றம் மூன் ஜாமின் வழங்கியுள்ளது. மேலும் அவரின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.