விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்ற முதியோர் ஜெயராமன் என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி. குமாரமங்கலத்தில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த அவர் உட்பட 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில் அதேபோன்று சம்பவம் தற்போது மீண்டும் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.