மதுரை மாவட்டம் உத்தங்கடியில் திமுக கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் தற்போது திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்த நிலையில் முதலில் கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, பெரியார் மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது திருவுருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பகல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் குறைந்தபட்சம் 30 சதவீதம் வாக்காளர்களை திமுகவின் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது மண், மொழி, மானம், மாநில உரிமைகளை காத்திட தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஓர் குடையின் கீழ் திரண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்வது காலத்தில் கட்டாயம் என குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.