
காதல் திருமண விவகாரத்தில் ஆள் கடத்தலுக்கு உடனடியாக இருந்ததாக ஏடிஜிபி ஜெயராம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரித்தனர். அதன் பிறகு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஏடிஜிபி ஜெயராம் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் பணியிடை நீக்கம் தொடர வேண்டும் எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்துள்ளார்.