முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, 2026 தேர்தலுக்கு நம்மை ஆயப்படுத்திக் கொண்டு மக்கள் நலனுக்காக மாற்றி தொடர்ந்திட ஆற்ற வேண்டிய களப்பணிகளை தீர்மானிக்கவும்,  அதனை ஒவ்வொரு தொகுதிகளிலும் செயல்படுத்தி வெற்றியை உறுதி செய்திடவும் கழக உடன்பிறப்புகளை பொதுக்குழுவில் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். பொதுக்குழுவில் கூடிடுவோம். பொதுத்தேர்தலில் வென்றிடுவோம் என கூறியுள்ளார்.

மேலும் திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளை பரப்பி, பொய் செய்திகளை பூதாகரமாக்கி தங்களை தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியுமா என கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. தனித்தனியாகவும், கூட்டணி சேர்ந்தும், ரகசியமாக ஆலோசனைகள் நடத்தியும் எதிரணியினர் ஊடகங்களிலும் சமூக வலைதளகங்களிலும் நமக்கு எதிரான பரப்புரை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.