
ஐபிஎல் 18 வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சுமார் 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த போது கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக வந்து இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்தது.
இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா நேற்று அறிவித்தார். தற்போது உயிரிழந்த 11 பேரில் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஆர் சி பி கேஸ் என்ற முன்னெடுப்பும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.