பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அன்புமணிக்கு பக்குவமோ தலைமை பண்பு இல்லை வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது என ராமதாஸ் கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

ராமதாஸ் அன்புமணி இடையிலான மோதல் அதிகரித்துள்ள நிலையில் இருவரும் இணையவில்லை என்றால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ அருள் கூறினார்.

மேலும் கட்சியில் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர் ராமதாஸ். என்னை நீக்குவதற்கும் கட்சியில் வைத்திருப்பதற்கும் அவருக்கு உரிமை உண்டு. பாமக தொண்டர்கள் உச்சகட்ட மன உளைச்சலில் இருக்கிறோம். சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறோம் என எம்எல்ஏ அருள் பேட்டி அளித்துள்ளார்.